ஊதிய முரண்பாடுகளை களைய கோரி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஜூன் 11ம் தேதி முதல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது.


திருச்சியில் நடந்த ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும் ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது.