கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டூர்புரத்தில் பேட்டி அளித்தார்.

அறிவிப்பு பலகையில் தனியார் பள்ளிகள் கட்டணம் விவரத்தை ஒட்ட வேண்டும் என்றும் கூறினார். பள்ளி திறந்த நாளிலேயே மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்றும் கூறினார். புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.