Jactto-Geo : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன 25 ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்


ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஒய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ,ஜியோ எனப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் வழக்கு கூறப்பட்பட்டிருந்தது. 

இன்று வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் வரும் 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.