Jactto Geo : வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் மீது ‘டெஸ்மா’ சட்டம் பாயுமா? பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்


பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய ஆசிரியர்கள், சிறந்த கல்வியை தரக்கூடிய ஆசிரியர்கள் பள்ளி பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும்.



பொதுத்தேர்வு வரும் நேரத்தில் இதுபோன்ற தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு துறை சார்பாக அறிவுரையும் வழங்கப்பட்டு உள்ளது. இதை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறோம்.

வேலைநிறுத்தம் நீடித்தால் மாற்று ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சரோடு கலந்து பேசி அறிவிப்போம். மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு மனிதநேயத்தோடு வேலைநிறுத்தத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ‘டெஸ்மா’ சட்டம் பாயுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘இது சிக்கலான கேள்வி. போராட்டம் தொடங்கி இருக்கிறது. போராட்டம் தொடருமா? என்று நாளை (இன்று) தான் தெரியும். 2 நாட்கள் கழித்து இந்த கேள்விகளை கேட்கலாம்’ என்றார்.