Jactto-Geo : கருத்துக்கள் முதல்வரிடம் எடுத்து செல்லப்படும் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை


Jactto-Geo மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இன்று, துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களை தற்போது சந்தித்துப் பேசினர்.

ஒருங்கிணைப்பாளர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட துணை முதல்வர் அவர்கள், நேர்மறையாக பதிலளித்ததோடு, முதல்வரிடம் இது குறித்துப் பேசுவதாகக் கூறியுள்ளார்.

மீண்டும் நாளை காலை 11:00 மணிக்குச் சந்திக்க, ஜேக்டோ-ஜியோவிற்குத் துணை முதல்வர் அவர்கள் நேரம் வழங்கியுள்ளார்