ஏப்ரல் 1-ம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல். கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளில் ஜுன் 1 பள்ளி திறந்த பின்பு மாணவர்கள் சேர்க்கையினை தொடங்குவதால் அதற்கு முன்பாகவே தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர்.

எனவே வரும் ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.