சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசானை



ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் வரும் வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் செயல்படும் எனபள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைவ வலியுறுத்திஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். அவர்களை திருப்பி வேலைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்த நிலையில்,ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் 10 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு செல்லவில்லை என்பதால் வரும் வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் ஆலோசானை நடை பெற்று வருகிறது