10th Board Exams: காலால் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய கையில்லாத மாணவன்; நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்



திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஹோலோஹஸ்ட் இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது கை  மற்ற மாணவர்கள் போல இருக்காது இதனால் இவரால் பேனாவை பிடித்து எழுத முடியாது. அதனால் இவர் துவண்டு போகவில்லை தனது சிறு வயது முதலேயே தனது கால் விரல்களால் பேனாவை பிடித்து எழுத துவங்கி விட்டார்.

இவருக்கு இருப்பது கேட்டா ஸ்ட்ரோபஸ் எனப்படும் மிக அரிதாக வரும் நோயாகும். இது இருப்பவர்களுக்கு கைகள் மற்றவர்கள் போல் இல்லாமல் எலும்புகள் லேசாக இருக்கும். இதனால் அவர்களால் கைகளை வைத்து எந்த வேலையும் செய்ய முடியாது.

இது குறித்து அந்த சிறுவன் சொல்லும் போது: "நான் எந்த விதத்திலும் எனக்கு குறையிருப்பதாக நினைக்கவில்லை. என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்படவே விரும்புகிறேன்.  தினமும் எனது கால்களால் 2 மணி நேரம் எழுதுவதற்கு பயிற்சி எடுக்கிறது. அதனால் தற்போது என்னால் கால்களாலும் விரைவாக எழுத முடியும். " என கூறினார்.

இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வுகள் அம்மாநிலத்தில் அறிவிக்கப்பட்டது இந்த மாணவர் குறித்து அறிந்த திரிபுரா மாநில கல்வித்துறை துணை செயலாளர் பிரதீப் குப்தா. அந்த மாணவருக்கு தேவையான வசதிகளைசெய்து கொடுக்க உத்தரவிட்டார். ஆனால் அந்த மாணவர் பரிட்சை எழுத அதிக நேரம் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்

இது குறித்து அந்த மாணவன் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் கூறும் போது : "இந்த மாணவனுக்கு எழுதுவற்கு சாதாரண மாணவர்களக்கு அமைக்கப்படும் டேபிள் சரியாக இருக்காது அதனால் இவர் எழுதுவதற்காக சிறப்பாக ஒரு பலகை மற்றும் இருக்கை தயார் செய்திருந்தோம்.  மற்றபடி இவருக்கும் மற்றவர்களுக்கும் எந்த வித சலுகையும் அவரும் கேட்கவில்லை நாங்களும் கொடுக்கவில்லை.

இவரது தந்தை ஒரு தினசரி கூலி தொழிலாளி, அவரது தாய் அங்கன்வாடி ஊழியர், இவர்களது குடும்பம் மிகவும் ஏழை குடும்பம், இவரக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். இவர்களை வளர்க்க இவர்களின் பெற்றோர் கடுமையாக கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹோலோகோஸ்டிற்கு எதிர்காலத்தில் ஆங்கில பேராசிரியராக வரவேண்டும் என்பது கனவாம்.