ஆசிரியர்களின் வருகைப் பதிவு (இன்று (09.02.2019) முதல்)பற்றி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு




*இன்று (09.02.2019) முதல் ஆசிரியர்களின் வருகையை TN Schoools செயலி மூலம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் கைபேசியிலிருந்து பதிவு செய்ய உள்ளோம்.

 *ஆசிரியர் வருகைப் பதிவு செயலியில் பதிவு செய்யும் வருகை, விடுப்பு விவரங்கள், எந்த வகையான விடுப்பு, Absent போன்ற அனைத்தும் e-Sr உடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.*

 *ஆகவே ஆசிரியர்களின் விடுப்பை பதிவு செய்யும் போது கவனமாக இருக்கவும்.*

*ஒரு முறை பதிவு செய்து விட்டால் மாற்றவே முடியாது.*

 *தவறுதலாக ஒரு ஆசிரியருக்கு absent என பதிவு செய்து விட்டால்,  அவருக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய நேரிடும் சூழல் ஏற்படும்.

*அதே போல தவறுதலாக EL என பதிவிட்டால், அவருடைய சேமிப்பில் உள்ள EL ல் ஒரு நாள் கழிக்க நேரிடும் என்பதால் மிக கவனமாக செயல்பட வேண்டும்.

*பதிவு செய்யும் இடம், நேரம், தேதி ஆகியவை உயர் அலுவலர்களுக்கு தெரியும் என்பதால் பள்ளியிலிருந்து மட்டுமே பதிவிட வேண்டும்.

*காலை 9.10 மணிக்குள் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

 *ஒரு ஆசிரியர் முற்பகல் மட்டும் தற்செயல் விடுப்பு எடுத்து, பிற்பகல் பள்ளிக்கு வந்தால், பிற்பகல் வருகையை பதிவு செய்ய தற்போதைய செயலியில் வசதியில்லை.

 *பள்ளிக்கு வராத ஆசிரியருக்கு, வந்ததாக தலைமை ஆசிரியர் பதிவு செய்தால், அதற்கான பின் விளைவுகளுக்கு தலைமை ஆசிரியர் மட்டுமே பொறுப்பேற்க நேரிடும் என்பதால், உண்மைத் தகவல்களை உள்ளீடு செய்வதே சிறந்தது.

நன்றி லாரன்ஸ்