School Morning Prayer Activities - 9th March 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் :- 9th March 2019

திருக்குறள்

அதிகாரம்:வெஃகாமை

திருக்குறள்:179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.

விளக்கம்:

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.

பழமொழி:

Procrastination is the thief of time

காலம் கடத்துவது இல்லை என்பதற்கு அடையாளம்

இரண்டொழுக்க பண்புகள்:

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்

பொன்மொழி:

நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.

 - பாரதியார்

 பொது அறிவு:

1. பூண்டி நீர்த்தேக்கம்  எங்கு எந்த ஆற்றின் குறுக்கே  அமைக்கப்பட்டுள்ளது?
 திருவள்ளூர் , கொற்றலை ஆறு

2. பூண்டி நீர்தேக்கத்தை அமைத்தவர் யார்?
 சத்தியமூர்த்தி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம் : கம்பங்கூழ்

1. கம்மங்கூழில் புரோட்டீன், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து என நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியது இந்த கம்பு.

2. உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு இந்த கம்மங்கூல் மிகவும் உறுதுணையாகிறது. மேலும் சிறுநீர்ப் பெருக்கத்திற்கும் இது உதவுகிறது.

3. நரம்புகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து இதயத்தை வலிமைபடுத்தும் ஆற்றல் பெற்றது கம்பு.

4. பெரும்பாலான நோய்கள் தாக்கத்திற்கு உடல்சூடே காரணம். கம்மங்கூல் சாப்பிடுவதால் உடல் சூடு குறைக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கிறது.

English words and Meaning

Reservation : முன் பதிவு
Monitoring:  கண்காணித்தல்
Alternative.: மாறுபட்ட, ஒன்று விட்டு ஒன்று
Concept. :    கருத்து
Adequate.:   போதுமான,தகுந்த (அளவு)

அறிவியல் விந்தைகள் : இலைத்துளைகள்

இலைத்துளைகள் (stomata) என்பது தாவர இலையின் மேற்புறத்தோலில் காணப்படும் துளைகளுக்கானத் தாவரவியல் பெயராகும். *மேற்புறத்தோலை விட, கீழ்புறத்தோலில்தி அதிக எண்ணிக்கையில் இலைத்துளைகள் காணப்படுகின்றன. *ஒவ்வொரு இலைதுளையும், ஒரு இணை அவரை விதை வடிவ காப்பு செல்களால் ஆக்கப்பட்டுள்ளது. *ஒவ்வொரு இலைதுளையும் ஒரு காற்றறையில் திறக்கிறது.
 *காப்பு செல்களில், பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன. நீராவி போக்கு, மற்றும் வாயு்பபரிமாற்றம் நிகழ, இலைதுளைகள் பயன்படுகின்றன.

Some important  abbreviations for students

* IAEA    -   International Atomic Energy Agency

* IARI    -   Indian Agricultural Research Institute

நீதிக்கதை:

கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.

பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.

கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

“தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்” என்று கெஞ்சினார்.

மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.

அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் “டக்… டக்”. கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். “அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்று வெகு இளக்கமாகப் பேசினான்.

காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான்.

மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. “ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்” என்றாள்.
அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.

வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.

இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.

வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.

மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.

இன்றைய செய்திகள் : 09.03.2019

* பொருளாதார விவகார துறை செயலாளராக இருந்து வந்த சுபாஷ் சந்திர கர்க், நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* நாடு முழுவதும் பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வாகன ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகம் வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

* தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத் துறையின் சார்பில்  2013-ம் ஆண்டு முதல், 2018-ம் ஆண்டு வரையிலான கலைச்செம்மல் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

* ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் காலிறுதியில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால் தைவான் வீராங்கனையிடம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

* இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய விராட் கோலியின் சதம் வீணானது.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸Subhash Chandra Garg, who was the secretary of the Department of Economic Affairs, has been appointed as the Finance Secretary.

🌸The Union Ministry of Road Transport and Highways has decided to issue a vehicle driver license and RCBook in the form of plastic cards across the country.

🌸Tamilnadu Government, Arts and Cultural Affairs Department has announced  the "Kalaichemmal  Awards" from 2013 to 2018.

🌸Saina Nehwal of India ,lost the straight set to Thaaivaan player in the All England Open badminton quarterfinals

🌸Australia won by 32 runs in the third ODI against India. Virat Kohli's wicket is a century

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்